செந்தமிழ்சிற்பிகள்

விந்தன் (1916 - 1975)

விந்தன் (1916 - 1975) 

அறிமுகம்

கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில்,செப்டம்பர் 22, 1916 -ம் ஆண்டு வேதாசலம்-ஜானகி தம்பதியினருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார்இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார்.

தமிழ்ப் பணி 

  • "தமிழரசு" மாத இதழிலும்  ஆனந்த விகடன் அச்சுக் கூடத்திலும் பிறகு கல்கி வார இதழிலும் அச்சுக் கோர்ப்பவராக  பணிபுரிந்தார்.
  • கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார்.
  • கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது
  • "காலி" புரூப்பில் பிழைகளை திருத்துவதுடன் புதிதாகவே கதை எழுதும் அளவுக்கு வாக்கியங்களைச் சேர்க்கும் இவரது திறமையைக் கண்டு வியந்த கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் "கல்கி" இதழில் தொடர்ந்து எழுதுமாறு ஊக்குவித்தார்.  
  • ஏழை எளியவர்கள்,உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தினரைப் பற்றிச் சிந்தித்து கதைகள் எழுதிய எழுத்தாளர்.
  • கல்கியின் துணை ஆசிரியராகவும் இயங்கிய விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) "விஜி" என்ற பெயரில் பல கதைகள் எழுதினார்
  • விஜி என்ற பெயரை "விந்தன்" என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் "கல்கி" கிருஷ்ணமூர்த்தி தான்.

படைப்புகள் 

  • 1946 இல் விந்தன் எழுதிய "முல்லைக் கொடியாள்" என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது.
  • விந்தனின் எழுத்துக்குத் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு ஏற்பட்டதால், "பொன்னி" மாத இதழ் ஆசிரியர், விந்தனைத் தொடர்களை எழுதுமாறு கூறினார்.
  • “கண் திறக்குமா?"-என்ற கதையை 1947இல் "நக்கீரன்" என்ற புனைப்பெயரில் எழுதினார்
  • "பாலும் பாவையும்" என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது.
  • "அன்பு அலறுகிறது", "மனிதன் மாறவில்லை" என்ற இரு நாவல்களை எழுதினார்.
  • மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி வைதீக மரபைத் தூக்கிப்பிடிக்கும்பஜகோவிந்தம்’(1956) எழுதினார். இந்நூலுக்குப் புடைநூலாகபசிகோவிந்தம்’ (1956) என்ற நூலை விந்தன் எழுதினார் இவ்விரு நூல்களையும் வெளியிட்டவர் பெண்ணாடம் ராமசாமி 
  • கையில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு "புத்தகப் பூங்கா" என்ற பதிப்பகமும் "மனிதன்" என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன்
  • ஏவி.எம்.நிறுவனத்தார், "பாலும் பாவை"யும் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.
  • "வாழப் பிறந்தவள்" படத்துக்கு வசனமும் "அன்பு" படத்துக்கு வசனமும், ஒரு பாடலும் ,"கூண்டுக்கிளி" என்ற படத்துக்கு வசனமும் எழுதினார்.
  • "குழந்தைகள் கண்ட குடியரசு",  "பாரதிபன் கனவு" திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.
  • இறுதி காலத்தில் தினமணி கதிர் இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.  

விருதுகள் 

  • தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் "முல்லைக் கொடியாள்" என்னும் சிறுகதைத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது
  • 1975ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.